கௌரவர்களின் தூண்
பாரத யுத்தம் முடியும் தருவாயில் வெற்றி ஒருவராக நிச்சயிக்கப்பட்ட சூழ்நிலையில் கொண்டாட்டங்கள் தொடங்க இருக்கும் நிலையில் கொதிக்கும் மனதுடன் வெறித்து பார்த்தான் அவன் குற்றுயிராய் துரியோதனன் வேதனையில் கிருபரும் கிருதவர்மரும் வெறியுடன் அஸ்வத்தம்மா உயிரற்ற உடல்களோ எண்ணில் அடக்கா இதை தவிர அங்கே வேறு ஒன்றும் இல்லை 11 அக்குரோணி சேனைகளும் பரலோகத்தில் கவசம் கழற்றாமல் கவனமாய் நோக்கினான் பாண்டவர் பாசறையை வெற்றிக்களிப்பில் மிதமிஞ்சிய ஆனந்தத்துடன் வீரர்கள் நடனமாடி கொண்டுஇருந்தார்கள் கோபக்கனலில் தான் நிலையை மறந்தான். ஏமாற்றம் அவன் வாழ்வில் புதிதல்ல. மாவை கரைத்து கொடுத்து பால் என்று ஏமாற்றிய தாய் வளர்த்த பருவத்தில் அர்ஜுனனுக்கு சொல்லி கொடுத்த அஸ்திரத்தை தனக்கு மறுத்த தந்தை தன் வாழ்வில் நிறைய ஏமாற்றங்களை அவன் சந்தித்தாலும் துரியோதனனுக்கு எந்த ஒரு ஏமாற்றத்தையும் தர அவன் விருப்ப வில்லை. தெரித்தோ தெரியாமலோ நடத்தை விதிகள் மீறாமல் இந்த யுத்தம் நடக்கவில்லை அதனால் தெரிந்தே அறிந்தே இன்று துணைக்கு இருவர் கொண்டு வீதிகளை மீறிய யுத்த செய்ய புறப்பட்டான் கிருபியின் புதல்வன். வில்லில் இருந